இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தில் எந்தவொரு பதவிகளையும் பெறுவதற்கும், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முடியாதவாறு அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு சட்டத்தின் பிரிவு 39 (3) ன் படி விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
மேலும் அவர்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்கவும் இந்த விடயம் குறித்து ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்கும் வகையில் மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
Thu, 09/12/2019 - 06:00
from tkn