கல் குவாரிக்கு அருகில் மறைத்திருந்த நிலையில் மீட்பு
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்புமடு பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (15) பிற்பகல் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப்பிரதேசத்திலுள்ள கல் உடைக்கும் (கல் குவாரி) இடத்திற்கு அருகே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாவனையற்ற நிலையில் இருந்த காணியில் புதைக்கப்பட்ட நிலையில் அமோனியா ஜெலக்னைட் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(பாறுக் ஷிஹான்)
Sun, 09/15/2019 - 19:17
from tkn