அமெரிக்காவின் அகதி முகாம்களில் நெரிசல்

அமெரிக்க மற்றும் மெக்சிகோ எல்லையில் உள்ள அகதிகள் தடுப்பு முகாம்கள் குறித்த விமர்சனங்கள் அதிகமாவதைத் தொடர்ந்து டிரம்ப் நிர்வாகம் குடியேறிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளது.

டெக்சாஸ் முகாம்கள் சிலவற்றில் அபாயகரமான அளவில் அதிகமானோர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாய் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு எச்சரித்ததையடுத்து அந்தத் தகவல் வெளியானது.

முன்னதாக, தடுப்பு முகாம்களைப் பார்வையிட்ட ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள நிலைமை அதிர்ச்சியளிப்பதாய்க் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதற்கு மறுநாள் அமைச்சின் கண்காணிப்பு அமைப்பு அந்த எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.

சிறார்கள் உள்ளிட்ட அகதிகள் கூண்டு போன்ற இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் படங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

தடுப்பு முகாம்கள் விரைவில் வெடிக்கவிருக்கும் குண்டுகளைப் போன்ற அபாய நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை