பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களுக்கு சிறிது அதிகரிப்பு ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பகுதிகளின்பல இடங்களில் குறிப்பாக பிற்பகல்  2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்சில இடங்களில் 100 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில்  பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும்,  பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.   

 

Thu, 05/23/2019 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை