கிளிநொச்சியில் வாள்வெட்டு; 9 பேர் படுகாயம்

கிளிநொச்சி, செல்வா நகரில் இடம்பெற்ற வாள்வெட்டில் கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாள்வெட்டுச் சம்பவத்தில்  ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் படுகாயமடைந்துள்ளனர்.

பட்டா ரக வாகனத்திலும் மோட்டார் சைக்கிளிலும் நேற்று (29) மாலை சென்ற 15 இற்கும் மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்தோடு மோட்டார் சைக்கிளொன்றும், வீடொன்றும் எரிக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளொன்று அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இரண்டு வீடுகளில் உடைமைகள்  சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை வாள்வெட்டிற்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பமொன்று, தங்களுக்கு சிலரால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறிகிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் நேற்றுமுன்தினம் (28) முறைப்பாடு செய்துள்ளதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.

(எஸ்.என்.நிபோஜன், முருகையா தமிழ்செல்வன் -கிளிநொச்சி குறூப் நிருபர்)  

 

 

Thu, 05/30/2019 - 09:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை