மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 ஆசிரியர்கள் இடமாற்றம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 115 ஆசிரியர்களுக்கு பதிலீடுயின்றி தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி பணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு ஆகிய வலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  

கல்குடா வலயத்திலிருந்து 68 ஆசிரியர்களும்,பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து 22 ஆசிரியர்களும்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும்,மட்டக்களப்பு வலயத்திலிருந்து 9ஆசிரியர்களுமாக 115 ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  

மேற் குறித்த வலயத்தில் சுமுகமாக பாடசாலைகள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், குறித்த பாடசாலையில் எதுவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையிலும் முன்னிலைப்படுத்தி வலயக்கல்வி பணிப்பாளர்கள் விடுவிப்பதாக தெரிவிக்கின்றார்கள்.  

இவ்வாசிரியர்கள் தங்களின் வசதிக்கேற்ப, கஸ்டப் பிரதேச பாடசாலைகளிலிருந்தும் இன்றைய அச்சமான சூழ்நிலையை காரணத்தைக்காட்டி இடமாற்றம் பெற்று வெளியேறி வருகின்றார்கள்.

பாடசாலைக்கு மாணவர்களின் வரவு குறைவாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான தற்காலிக இடமாற்றத்தால் மாணவர்களின் கல்வி மேலும் பாதிக்கப்படுகின்றது.  

இதனால், தொடந்தும் தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு முஸ்லிம் பிரதேசத்தில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களை மேற்குறித்த வலயத்திற்கு இடமாற்றம் வழங்கி இயல்பான கற்றல்,கற்பித்தல் நடவடிக்கைக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் கோரிக்கைகள் முன்வைக்கின்றன.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Wed, 05/15/2019 - 08:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை