சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

பொகவந்தலவை, பெற்றசோ டெவன்போல் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேரை இன்று (10) அதிகாலை பொகவந்தலவை பொலிஸார்   கைதுசெய்துள்ளனர்

இது தொடர்பாகத் தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து முன்னடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன்,  மாணிக்கக்கல்  அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலவை, பெற்றசோ டெவன்போல் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிஜ் நிருபர்)

Wed, 04/10/2019 - 12:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை