கிழக்குப் பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை

RSM

முஸ்லிம் பாடசாலைகள் இன்று ஆரம்பம்

ஏனைய பாடசலைகள் திங்கட்கிழமை ஆரம்பம்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. அம்மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின்  பணிப்புரைக்கமையவே இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடுமுறைகளுக்கு பதிலாக  எதிர்வரும் 27ஆம் திகதியும் மற்றும் மே 4ஆம் திகதியும் பதில் பாடசாலைகள் நடத்தப்படும் என, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகள், முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாம் தவணைக்காக இன்று (17) ஆரம்பமாகியுள்ளன.

அத்தோடு, அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆரம்பமாகும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக கடந்த 5ஆம் திகதி மூடப்பட்டன. இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக கடந்த 11ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 04/17/2019 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை