மீள அறிவிக்கும் வரை, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு, நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மீள அறிவிக்கும் வரை, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sun, 04/21/2019 - 16:46
from tkn