சந்தேகத்தின் பேரில் 18 பேர் கைது

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து நேற்றிரவு (23) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, அளுத்கம தர்கா நகரில்  6பேரும்,  பேருவளை கங்காவன்கொட பகுதியில் 5பேரும் கட்டான, கட்டுவாப்பிட்டிய பகுதியில் 6பேரும்  வரக்காபொலவில் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வரக்காபொல, அங்குறுவெல்ல வீதியில் மத்திஸ் மாவத்தையிலுள்ள வீடொன்றில் விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் சோதனையிட்டபோதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரின் வீட்டிலிருந்து 4 வோக்கிடோக்கிகளும் மோட்டார் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Wed, 04/24/2019 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை