மோட்டார் சைக்கிளொன்றில் 05கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளைக்; கொண்டுசென்ற குற்றச்சாட்டில் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன், ஹெரோய்ன் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாகக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, இச்சந்தேக நபர் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகொழ வை சந்தியில் இன்று (18) நண்பகல் 12.00மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
களனி, கிரிபத்கொடையைச் சேர்ந்த சமரவீர ஆராச்சிகே ஜீவன் பெரேரா (28) என சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Fri, 04/19/2019 - 16:29
from tkn