மொரடுமுல்லை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு; இரண்டு பேர் உயிரிழப்பு

மொரடுமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மொரடுமுல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரடுமுல்லை-பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கருகில் இன்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர். இவர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்

இச் சம்பவம் தொடர்பில் மொரடுமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Thu, 03/14/2019 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை