சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த இராணுவ வீரர் கைது

பதுளை மாவட்டம் ரிதீமலியத்த பிரதேசத்தில் தன்னியக்க மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்கு நேரடியக பயன்படுத்தக்கூடிய வெடிமருந்துகளை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளவரிடமிருந்து 346வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர். 273தன்னியக்க துப்பாக்கி ரவைகள், 73விமான எதிர்ப்பு ஆயுதங்களுக்கு பயன்படுத்தக் கூடிய வெடிமருந்து மற்றும் 02துப்பாக்கி பெரல்கள் ஆகியனவே இவ்வாறு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் மன்னார் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் 36வயதுடைய நபர் என்று தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று (06) மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ரிதீமலியத்த பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Wed, 03/06/2019 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை