நாட்டின் சில பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் சில பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. 

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன், மழையுடன் காற்று வீசக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.

எனவே,  இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Fri, 03/01/2019 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை