கிரான்ட்ஸ்லாம் கரமில் சஹீட், ரொஷிட்டாவுக்கு தோல்வி; விமானப்படைக்கு அதிக கௌரவம்

இலங்கையின் கரம் விளையாட்டில் முன்னணி வீரர்களுக்கிடையில் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற கிராண்ட்ஸ்லாம் கரம் வல்லவர் போட்டிகள் கடந்த வாரம் நிறைவுக்குவந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் சம்பியன் பட்டங்களை இலங்கை விமானப்படை அணி வெற்றிகொண்டது.

தெஹிவளை - களுபோவில கரம் சம்மேளனத்தில் நடைபெற்ற இம்முறை கிராண்ட்ஸ்லாம் கரம் வல்லவர் போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதல் 8 இடங்களில் உள்ள வீர,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். இதன்படி,விமனாபப்டையைச் சேர்ந்த 4 வீரர்களும்,ஒரு வீராங்கனையும், இராணுவப்படையைச் சேர்ந்த 2 வீரர்களும், 5 வீராங்கனைகளும் போட்டியிட்டனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு தேசிய சம்பியனான சஹீட் ஹில்மியை 2க்கு 1 என்ற ஆட்ட்ங்கள் கணக்கில் வெற்றிகொண்ட விமானப்படை வீரர் உதேஷ் சந்திம பெரேரா முதற்தடவையாக சம்பியனாகத் தெரிவானார். இப் போட்டியில் சஹீட் ஹில்மியை 25--7, 15--25, 25--23 என்றபுள்ளிகள் அடிப்படையில் உதேஷ் சந்திம வெற்றிகொண்டார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தேசிய கரம் சம்பியன் பட்டத்தை மூன்று தடவைகள் வென்றவரும்,நடப்புஉலககெரம் ஒற்றையர் சம்பியனுமான நிஷாந்த பெர்னாண்டோவை 2க்கு 1 என்ற ஆட்டங்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கரம் கிராண்ட்ஸ்லாம் வல்லவர் போட்டிகளின் நடப்புச் சம்பியனான கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்தசஹீட் ஹில்மி,கடந்தமாதம் நடைபெற்ற தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதல்தடவையாகசம்பியனாகத் தெரிவாகியதுடன்,கடந்த ஜனவரிமாதம் நடைபெற்றசம்மேளனக் கிண்ணகெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார்.

பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் கடற்படையைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டாவை 2க்கு 0 என்ற நேர் ஆட்டங்கள் கணக்கில் விமானப்படையச் சேர்ந்த சலனிலக்மாலி வெற்றிகொண்டார். குறித்தபோட்டியில் 25-0, 25-24 என்றபுள்ளிகள் அடிப்படையில் சலனி வெற்றிகொண்டுசம்பியனாகத் தெரிவானார். இதில் அண்மைக்காலமாக தேசிய சர்வதேச மற்றும் தேசிய மட்டப் கரம் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட தமிழ் பேசும் வீராங்கனையான ஜோசப் ரொஷிட்டா,அண்மையில் நிறைவுக்கு வந்த சம்மேளனக் கிண்ண கரம் சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் சம்பின் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்தபோட்டித் தொடருக்குப் பிறகு இலங்கை கரம் சம்மேளனத்தினால் கரம் தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலும் உள்ளவீர,வீராங்கனைகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்கள்

1.உதேஷ்; சந்திமபெரேரா (விமானப்படை), 2. சுஹீட் ஹில்மி (கொழும்பு றோயல் கல்லூரி), 3. தினெத் துலக்ஷன (விமானப்படை), 4. ஹசித அநுருத்த (விமானப்படை), 5. நிஷாந்த பெர்னாண்டோ (கடற்படை), 6. அனஸ் அஹமட் (இராணுவப்படை), 7. எவோன் விக்ரமசிங்க (விமானப்படை), 8. எம். ஷெரிப்டீன் (இராணுவப்படை)

பெண்கள்

1.சலனில் கமாலி லியனகே (விமானப்படை), 2. ஜோசப் ரொஷிட்டா (கடற்படை), 3. எம். சித்ராதேவி (இராணுவப்படை), 4. மதுவன்திகுணதாச (இராணுவப்படை), 5. ரெபேகாடெல்ரின் (இராணுவ ப்படை), 6. மதுகாதில்ஹானி (இராணுவப்படை), 7. தஸ்மிலாகாவின்தி (நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரி), 8. சசிக்கா சந்தமாலி (இராணுவப்படை).

(பீ.எப் மொஹமட்)

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை