50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் ஒன்று விபத்து

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீட்று தோட்டத்திற்கருகில் உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (10) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காரில் பயணித்த மூவர் காயங்களுடன் மீட்கப்பட்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தப்பளை பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற இக்கார் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.

(நுரெலியா தினகரன் நிருபர் - தியாகு சுப்ரமணியம்)

Sun, 03/10/2019 - 16:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை