புதையல் தோண்டிய 08 பேருக்கு விளக்கமறியல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் தோப்பூர் பகுதியில் புதையல் தோண்டிய எட்டுப் பேரை  19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன்    நேற்றுமுன்தினம் (6) உத்தரவிட்டார். 

தோப்பூர், ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த நால்வரும், ஹற்றன்,வெலிஒயா,வட்டவெல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் தோப்பூர் நல்லூர் பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த வேளையிலேேய எட்டுப்பேரையும்  கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்களிடமிருந்த சவல், மண்வெட்டி மற்றும் அலவாங்கு, கூடைகள் போன்றவற்றினையும் கைப்பற்றியுள்ளதாகவும் ,ஹற்றன் பகுதியைச் சேர்ந்ததோடு குருக்கள் ஒருவரும் அடங்குவதாகவும்பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

(கந்தளாய் தினகரன் நிருபர்)

Fri, 03/08/2019 - 11:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை