சட்டவிரோத யானை பராமரிப்பு வழக்கு; அலி ரொஷான் உட்பட 07பேர் விடுவிப்பு

அனுமதிப்பத்திரம் இன்றி நான்கு யானைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07பேரையும் விடுவிக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமான வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற காரணத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

போலி அனுமதிப்பத்திரம் வைத்துக் கொண்டு யானைகளை பராமரித்தார் என்ற குற்றச்சாட்டில் 13.03.2015 ஆம் திகதி குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் நிராஜ் ரொஷான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 03/07/2019 - 12:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை