ரத்கம ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது

ரத்கம காலி வீதியில் கடந்த ஆறு மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.

ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரின் கொலையுடன் தொடர்புடைய ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைதுசெய்யப்படுவர் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பிலேயே அப்பிரதேசவாசிகள்  இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ரத்கம, பூஸ்ஸ, ரத்னஉதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ரசின் சிந்தக மற்றும் 33 வயதான மஞ்சுள அசேல குமார ஆகிய  வர்த்தகர்கள் இருவர்,  கடந்த ஜனவரி 23ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தனர். இதனையடுத்து, சி.ஐ.டி. அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது,  அவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

Sat, 02/23/2019 - 16:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை