ரூ. 56 இலட்சம் பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது

Rizwan Segu Mohideen

- 14 கையடக்க தொலைபேசிகளும் மீட்பு
- புளியங்குளத்தில் ஆயுதங்களுடன் ஐவர் கைதுடன் தொடர்பு

ரூபா 56 இலட்சத்திற்கும் அதிகமான 402 கிராம் (402.12) ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புளியங்குளம் ஏ9 வீதியின் புத்தூர் கோவில் பிரதேசத்திலுள்ள புகையிரத வீதிக்கு அருகில் வைத்து நேற்றையதினம் (01) ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் அனைவரையும் தடுத்து வைத்து விசாரித்த வேளையில், அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால், இன்றையதினம் (02) குறித்த சந்தேக நபர்கள் 6 பேரும் மீரிகம மற்றும் வியாங்கொடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி ரூபா 56 இலட்சத்திற்கும் அதிகமான மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீரிகம, இராஜகிரிய, வவுனியா புளியங்குளம் பிரதேசங்களை சேர்ந்த 28, 32, 46, 26, 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்களை தடுத்துவைத்து விசாரிப்பதற்கான உத்தரவை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Sat, 02/02/2019 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை