அக்கரைப்பற்றில் முதல் தடவையாக புகைப்படக் கண்காட்சியொன்று கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்களில் (05 - 06) இடம்பெற்றது. புகைப்படக் கலைஞர் அப்துல் ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இப் புகைப்படக் கண்காட்சியில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 28 புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அக்கரைப்பற்று பெபிள்ஸ் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற இப்புகைப்படக் கண்காட்சியில் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா கலந்து கொண்டதோடு அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். றிம்ஸான் கலந்து கொண்டனர்.
புகைப்படக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்ட புகைப்படங்களில் பத்துக் கலைஞர்களின் புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டதோடு இப்பத்துப் பேரில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மட் காசிம் முஹம்மட் ஆசிக், அப்துல் மஜீட் பாசித் அல் நாசர், அன்வர் முஹம்மட் அம்ஜத் ஆகியோர் பெற்றுக் கொண்டதோடு, சிறப்புப் பரிசினை வைத்தியர் ஆகில் சரீப்தீன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பெற்ற புகைப்படம்
இரண்டாமிடம் பெற்ற புகைப்படம்
மூன்றாமிடம் பெற்ற புகைப்படம்
from tkn