வர்த்தக அமைச்சு தெரிவிப்பு
பொருட்களின் இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான வர்த்தக அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம், நுகர்வோர் சேவை அதிகார சபையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார்.
இதுவரை பதினொரு வகையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒரு கிலோ எடையுள்ள பொருளை கொழும்பு தங்க நகைகளையும் 15 இலட்சம் ரூபா பணத்தையும் திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாபிள் வர்த்தகரான கோடீஸ்வரரின் வீட்டில் நேற்று முற்பகல் 8.00 மணியளவில் புகுந்துள்ள மேற்படி கொள்ளையர்கள் வீட்டில் தங்கியிருந்த யுவதியின் கைகளை பட்டித் துண்டொன்றினால் கட்டி அவரைப் பயமுறுத்தி வீட்டின் முன் ஹோலிலுள்ள கதிரையொன்றில் அமர்த்திவிட்டு அவரிடம் அச்சமயம் கையடக்கத் தொலைபேசி இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டுள்ளனர். அதனையடுத்து அந்த யுவதியை அவரது அறைக்கு கூட்டிச்சென்று தம்மிடம் துப்பாக்கி உள்ளதாக கூறி பயமுறுத்தி அலுமாரியிலுள்ள பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கொள்ளையர்களை கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
from tkn