பேராயர் ரஞ்சித்துக்கு கொரோனா தொற்று

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கொரோனா வைரஸ் நோயில்

பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராயர் இல்ல அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் அவரின் உடல்நிலை வழமைக்குத் திரும்புவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கொரோனா காரணமாக சிகிச்சைபெற்று வருவதால் அவர் சம்பந்தப்பட்ட விசேட நிகழ்வுகள் மற்றும் சந்திப்புக்கள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாக பேராயர் இல்ல அதிகாரி தெரிவித்தார்.

அதேவேளை, அவரது உடல் நிலை தேறிவருவதால் இரண்டொரு தினங்களில் அவர் வைத்தியசாலையிலிருந்து பேராயரில்லத்துக்கு திரும்புவாரென்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 08/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை