நாயை அடித்துக் கொன்ற இருவர் யாழ்.நகரில் கைது

ஊர்காவற்றுறை பொலிஸார் அதிரடி

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில்,

இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரியா ல் துண்டித்து, நாயின் முகத்தை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர். தமது கொடூரமான செயலை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துமுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Sat, 08/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை