சர்வகட்சி அரசாங்கத்தில் நிபந்தனைகளுடன் இணைவு

TNA தயாராக இருப்பதாக வினோMP பேச்சு

நாடு, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் சர்வ கட்சியின் தேவையை நாங்கள் புரிந்து கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“சர்வகட்சி அரசாங்கம் உருவாகும் எனில் நாங்கள் நாட்டு மக்களின் நன்மை கருதியும் நாட்டின் சூழ்நிலை கருதியும் சில நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய தயாராக உள்ளோம்.

ஆனால் கடந்த காலங்களில் ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகளில் அவர்களை ஏமாற்றியுள்ளனர்.இதனை நல்ல அனுபவமாக கொண்டு,யாருக்கும் நாங்கள் எழுந்தமானமாக ஏமாற்றுத்தனமாக ஆதரவு தருவதற்கு தயாராக இல்லை”என கூறியுள்ளார்.

 

Sat, 08/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை