கட்சி சாராத அரசுக்கு EPDP ஆதரவு வழங்கும்

பிரதமருக்கு டக்ளஸ் MP பதில் கடிதம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம், சிறந்த பொறிமுறையாக அமையுமென தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கட்சி சாராத அரசாங்கத்தை அமைக்கும் பிரதமர் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு ஈ.பி.டி.பி. கட்சி பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறையை முழுமையாக அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அதனைப் பயன்படுத்த வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதத்துக்கான பதில் கடிதத்திலேயே ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அழைப்பையேற்று, சவால்மிக்க தருணத்தில் பிரதமர் பதவியை பொறுப்யேற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீளும் நோக்கில் பல்வேறு நாடுகளுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர்பாடல்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

 யாழ்.விசேட நிருபர்

 

Sat, 05/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை