பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் அறுவர் பலி

ஆப்கானிஸ்தானுடனான எல்லைக்கு அருகில் வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ வாகனம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் மூன்று சிறுவர்கள் மற்றும் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு வசிரிஸ்தானின் பழங்குடி மாவட்டத்தில் உள்ள மிர் அலி சிறு நகரித்துக்கு அருகில் இருக்கும் கிராமம் ஒன்றில் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் குண்டுதாரி தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததாக பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தரப்பு பொறுப்பேற்கவில்லை.

Tue, 05/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை