ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் பிரதமர் நன்றி

 பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை அனுப்பியமை தொடர்பிலேயே ரணில் விக்ரமசிங்க, தமது நன்றியை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு,   இந்தியாவில் இருந்து பால் மா, அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகளை அனுப்பியமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் தாம் பாராட்டுவதாக, ரணில் விக்ரமசிங்க ட்வீட் செய்துள்ளார்.

கடந்த மே 18ஆம் திகதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இலங்கைக்கான உணவுப்பொருட்களை ஏற்றிய கப்பலை அனுப்பிவைத்திருந்தார்.

Tue, 05/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை