பாராளுமன்ற அதிகாரத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம்

அமைச்சரவை நியமனத்தின் பின் ஏற்பாடு

 

பாராளுமன்றத்திற்குள்ள அதிகாரத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வகையில் பாராளுமன்றத்திற்குள்ள அதிகாரத்தை அதிகரித்து அனைத்து அமைச்சுக்களுக்கும் மேற்பார்வை குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று மாத்தறை மாவட்ட எம்.பி புத்திக பத்திரன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மேற்பார்வை குழுக்களை அமைப்பதற்கு முன் அமைச்சரவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் போது எழுந்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன:

மேற்பார்வைக் குழுவை செயற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் அனுமதி வழங்கியுள்ளனர். அனைத்து அமைச்சுக்களுக்கும் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

எவ்வாறெனினும் அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னரே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 05/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை