71 எம்பிக்களுக்கு புதிய வீடுகள் வழங்க முடிவு

நாட்டில் பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது 71 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அவர்களுக்கு விரைவாக புதிய வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான  இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இடம்பெற்ற வன்முறயைால், சில பாராளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் தனித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பாராளுமன்றம் தலையிட்டு அவர்களுக்கு விரைவில் வீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

 

Wed, 05/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை