1,000 உக்ரைனிய படையினர் சரண்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள உருக்காலையை தக்கவைத்திருந்த சுமார் 1,000 உக்ரைனிய படையினர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனிய இராணுவத்தின் 694 படையினர் மற்றும் அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 24 மணி நேரத்திற்குள் சரணடைந்ததாக அது குறிப்பிட்டது. இதன்படி மொத்தம் 959 படையினர் சரணடைந்துள்ளனர்.

இந்த உருக்காலையில் இருந்து வெளியேறுவோர் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதன்படி மரியுபோல் நகர் ரஷ்யாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

Thu, 05/19/2022 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை