IMF அறிக்கையை அரசு நிராகரிக்கவில்லை முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைக்கு உதவி வழங்காதென சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் கூறவில்லையென தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு உதவுவது போன்று செயற்பட்டு சிலர் இவ்வாறான வதந்திகளையும் பரப்புவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி இணக்கம் தெரிவித்துள்ளமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Sat, 04/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை