CEYPETCO: உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை ரூ. 84 முதல் 113 வரை அதிகரிப்பு

- வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

இன்று (19) முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்துள்ளது.

அதற்கமைய

பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 254 இருந்து ரூ. 338 (ரூ. 84 ஆல்)
ஒக்டேன் 95: ரூ. 283 இருந்து ரூ. 373 (ரூ. 90 ஆல்)

டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 176 இருந்து ரூ. 289 (ரூ. 113 ஆல்)
சுப்பர் டீசல்: ரூ. 254 இருந்து ரூ. 329 (ரூ. 75 ஆல்)

அதிகரிக்கப்பட்டுள்ளது. <<< இறுதியாக CEYPETCO மேற்கொண்ட எரிபொருள் விலை அதிகரிப்பு விபரம் >>>

ஏற்கனவே நேற்று நள்ளிரவு (18) முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோல்
- ஒக்டேன் 92: ரூ. 303 இருந்து ரூ. 338
- ஒக்டேன் 95: ரூ. 332 இருந்து ரூ. 367

டீசல்
- Auto Diesel: ரூ. 214 இருந்து ரூ. 289
- Super Diesel: ரூ. 252 இருந்து ரூ. 327

அதிகரிக்கப்பட்டிருந்தன.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

இதேவேளை, கடந்த வாரம் (15) கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும் எரிபொருள் அளவு தொடர்பான கட்டுப்பாட்டையும் நீக்குவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

Tue, 04/19/2022 - 00:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை