எட்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

எட்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை-Land Slide Early Warining-DMC

நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல் ஆகிய 8 மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களின் பின்வரும் பிரதேசங்களில் மட்டம் 1 நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Sun, 04/10/2022 - 16:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை