போராட்டங்களை நடத்துவதனால் எந்த பயனுமில்லை

முரளிதரன் கருத்து

போராட்டங்கள் நடத்தப்படுவதால் எந்தப் பயனுமில்லையென இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போராட்டங்கள் நடைபெறுவதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள். இதனால், வருமான இழப்பு ஏற்படும்.

எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கைவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருவதன் மூலம், நாட்டுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படுமென முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற இருக்கின்ற சந்தர்ப்பத்தில், இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தும் என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

Wed, 04/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை