மூன்று பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய படையால் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகருக்கு அருகில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று பலஸ்தீன போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்றில் பலஸ்தீனர்கள் தாக்குதல் ஒன்றை தொடுத்ததோடு அவர்களை கைது செய்ய முயன்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மீதும் தாக்குதல் தொடுத்தனர் என்று இஸ்ரேலிய பொலிஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த மோதலின்போது நான்கு இஸ்ரேலிய துருப்புகள் காயமடைந்ததாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதில் கொல்லப்பட்டவர்கள் தமது உறுப்பினர்கள் என இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு உறுதி செய்துள்ளது. தமது பிரஜைகள் மீதான எந்த ஒரு தாக்குதல் முயற்சிக்கு எதிராகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Mon, 04/04/2022 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை