எரிசக்தி அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு
நாட்டுக்கு தேவையான எரிபொருள் தற்போது கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும் அடுத்த 14 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மற்றும் பௌசர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவியை கோருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மின்சார சபைக்கு தேவையான எரிபொருளும் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விநியோக நடவடிக்கைகளின் தாமதமே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
from tkn