இடைக்கால அரசாங்கம்; எனக்கு உடன்பாடில்லை

வன ஜீவராசிகள் அமைச்சர் விமலவீர

இடைக்கால அரசு அமைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர

திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தானும் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினரும் மஹிந்த ராஜபக்ஷவின் படத்தை காட்டித்தான் பாராளுமன்றத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

எனவே, பொதுஜன பெரமுன ஆட்சி அமைப்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுயாதீனமாக செயற்பட்டு வரும் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Fri, 04/29/2022 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை