நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழை

இன்று (24) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வட மாகாணம் மற்றும திருகோணமலை கரையோர பிரதேசங்களில் காலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்றும் வாய்ப்பு காணப்படுகின்றது.

தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Sun, 04/24/2022 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை