இலங்கையின் ஒரு சில பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

- ஏனைய இடங்களில் சீரான வானிலை

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏனைய இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Sat, 04/16/2022 - 10:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை