ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி காலிமுகத்திடல் முன்கூட்டியே கொழும்பு மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டும் விதமாக மாபெரும் கூட்டத்தைத் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மே தின கூட்டத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Mon, 03/21/2022 - 06:00
from tkn