GCE A/L செயன்முறை பரீட்சைகள் நேற்று ஆரம்பம்

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடன மற்றும் சங்கீத பாடத்துக்குரிய செயன்முறைப் பரீட்சை நேற்று ஆரம்பமாகின.

இந்தப் பரீட்சைகள் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பம், பொருளியல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், நாடகம் போன்ற பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று ஆரம்பமாகிய செயன்முறைப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் அனுமதிப்பத்திரம் கிடைககாதவர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் அனுமதிப்பத்திரத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 03/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை