லிட்ரோ gas விலை அதிகரிக்கப்படவில்லை

அதன் நிறுவன தலைவர் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சில விநியோகஸ்தர்கள் நேற்று முன்தினமிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை தாறுமாறாக உயர்த்தியதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் விலை அதிகரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

லிட்ரோவின் போட்டியாளரான லாஃப்ஸ் எரிவாயு விலையை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில விநியோகஸ்த்தர்கள் 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரை ரூ. 4,200 விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எவரேனும் அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வது சட்ட விரோதமானது என அவர் தெரிவித்தார்.

கேஸ் தட்டுப்பாட்டினால் மக்கள் தினமும் நீண்ட வரிசையில் இருந்து வருவதோடு நேற்றும் பல இடங்களில் மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்றதாக அறிய வருகிறது.

 

Tue, 03/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை