பிரதேச சபை உறுப்பினர் நூதன போராட்டம்

பசறை பிரதேச சபை முன்றலில் சம்பவம்

பசறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் தலை மொட்டையடித்து மேலுமொரு நூதனப் போராட்டத்தை நேற்று (24) பசறை பிரதேச சபை முன்றலில் மேற்கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கொழும்பில்

போராட்டக்கள மைதானத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டமொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

ஆட்சியாளர்களின் தவறான நிருவாகத்தினால், நாடு அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு மற்றும் தட்டுப்பாடு, எரிபொருள் உள்ளிட்ட எரிவாயு ஆகியனவற்றைப் பெற மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஆகியவற்றினால் மக்கள் சொல்லெண்ணாத் துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நாடு அனைத்துத் துறைகளிலும் வங்குரோத்து நிலையினை அடைந்துவிட்டது. இவ் அவல நிலையினை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களின் கூட்டத்தினரையும், ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மேற்படி மொட்டையடிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் இரு மணித்தியாலங்கள் நீடித்த இந்த மொட்டையடிப்புப் போராட்டத்தையடுத்து, பசறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற பசறை பிரதேச சபையின் மாதாந்த அமர்விலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் கலந்துகொண்டு, நாட்டில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்த பிரேரணையை முன்வைத்து ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் கண்டனப் பிரேரணையொன்றையும் முன்வைத்து உரையாற்றினார்.

Fri, 03/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை