டீசல் தட்டுப்பாடு: வரிசைகளில் நின்றாலும் கிடைக்காது

நாளை (30), நாளை மறுதினம் (31) ஆகிய இரு தினங்களுக்கு டீசலுக்காக வரிசையில் நிற்க வேண்டாமென பொதுமக்களிடம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

37,500 மெற்றிக் தொன் டீசலை கொண்டு வந்த கப்பலில் இருந்து இன்று (29) திட்டமிட்டபடி டீசலை இறக்க முடியாமல் போனமை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு தடங்கலின்றி தொடர்ச்சியாக டீசல் வழங்கப்படுமென அறிவிகாகப்பட்டுள்ளது.

அத்துடன் பெற்றோல் விநியோகமும் வழமை போன்று தட்டுப்பாடு இன்றி இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tue, 03/29/2022 - 23:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை