அமைதியாக இருக்க ஐ.தே.க தயாரில்லை

பாலித ரங்கே பண்டார அறிவிப்பு

பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த முடியாவிட்டால், பதவி விலகுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார விடுத்துள்ள அறிக்கையில், தற்போதைய நிர்வாகம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் இரண்டு வருடங்களில் நாடு சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும், பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதும் வரிசையில் நிற்பது, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதற்கு தெளிவான சான்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாளுக்கு நாள் அரசாங்கம் நாட்டை கஷ்டமான நிலைக்கு இழுத்துச் செல்வதால் பொதுமக்கள் காத்திருக்க முடியாது.

அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு ஹை பார்க் மைதானத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்தியாக்கிரகப் போராட்டம் அரசியல் நிகழ்வாக இல்லாமல் நாட்டைப் பாதுகாக்கும் தேசிய நிகழ்வாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Tue, 03/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை