கியேவில் இருக்கும் இந்திய தூதரகத்தினால் பயண ஆலோசனை வெளியிடப்பட்ட பின் சுமார் 17,000 இந்திய நாட்டவர்கள் உக்ரைன் எல்லையை விட்டு வெளியே இருப்பதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் 15 வரையான விமானங்கள் இயக்கப்படவிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டுவரும் கங்கா திட்டம் பற்றி ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தாம் பக்சி, “உக்ரைனை விட்டு வெளியேறிய இந்தியர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது ஆலோசனை வெளியிடப்பட்டது தொடக்கம் உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 17,000 இந்திய நாட்டவர்கள் வெளியேறி இருப்பதாக நாம் கணித்துள்ளோம்.
இதில் தூதரகத்துடன் முன்னர் பதிவு செய்யாத இந்தியர்கள் சிலரும் உள்ளனர்” என்றார்.
from tkn