வாகன விபத்தொன்றில் தனது காலை இழந்த புத்தல, கடுகஹகல்கேகம கனிஷ்ட பாடசாலையில் 07ஆம் தரத்தில் கல்வி பயிலும் சந்தரு டில்ஷான் மாணவனுக்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து (31) செயற்கை கால் ஒன்றை வழங்கினார்.
செயற்கை காலை கொள்வனவு செய்வதற்காக, தான் பாடசாலை நேரத்தின் பின்னர் மிளகாய் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும், கடுகஹகல்கேகம கனிஷ்ட பாடசாலையின் அதிபர் டீ.எம்.எஸ்.எஸ்.திசாநாயக்க இது குறித்து அறிந்து பிரதமரின் பாரியாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து தனக்கு செயற்கை கால் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த சந்தரு டில்ஷான் மாணவன், தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சந்தரு டில்ஷான் மாணவனின் நலன் விசாரித்ததுடன், அவரது எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
from tkn