யாழ். ஊடக மாநாட்டில் ஜீ.எல். பீரிஸ்
இலங்கையில் கொரோனா தலைவிரித்தாடிய நிலையிலேயே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதாகவும் விரைவில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு எந்தவித அரசியல் நோக்கங்களும் இல்லை. “நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. அதேபோல், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல பலாலி விமான நிலையமும் திறக்கப்படும். தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.
மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது. எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும் என்றார்.
from tkn