நீரேந்து பகுதிகளில் கடுமையான வரட்சி

மின் உற்பத்தி பெரிதும் பாதிப்பு

 

நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தும் மலையகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான மவுசாக்கலை நீர்த்தேகத்தில் நேற்று முன்தினம் (21ஆம் திகதிக்கு) சுமார் 55 வீதம் வரை நீர் குறைந்துள்ளதாகவும் தற்போது 45.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் மின்சார சபை பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந் நீர்த்தேக்கத்தில் நீர் வற்றியதன் காரணமாக நீருக்குள் மூழ்கிக் கிடந்த கதிரேசன் ஆலயம், விகாரை,புத்தர்சிலை, பள்ளிவாசல், மஸ்கெலியா பழைய நகரம் உள்ளிட்ட பல கட்டடங்கள், மற்றும் பாலங்கள் வீதிகள் ஆகியன தென்பட ஆரம்பித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையையடுத்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெய்யிலுடனான காலநிலை நிலவி வருகிறது. நீரேந்தும் பிரதேசங்களுக்கு கடந்த ஒரு சில மாத காலமாக மழை பெய்யாததால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 78 சதவீதம் நீர் குறைந்துள்ளதாகவும் தற்போது 22 வீதம் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 55 வீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது இந் நீர்த்தேக்கத்தில் 45.6 வீத நீர் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹற்றன் விசேட நிருபர்

Wed, 02/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை